இத்தாலியரின் பிடிக்குள் இருந்த சோமாலியா ஒரு கால்த்தில் மிகவும் பசுமை நிறைந்த நாடாக இருந்தது. இத்தாலியரின் பிடிக்குள் சிக்கி இரசாயன கழிவுகளை கொட்டும் இடமாகவும் பல இரசாயன பொருள்கலை அகண்டு எடுக்கும் நிலமாகவும் சோமாலியா மாறியது.
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலிய வளமான விவசாய நிலங்கள் எல்லாம் பாழாகியது. மோகதிசியோ ஜமாமே போன்ற கரையோர நகரங்களுடன் இணைந்த செழிப்பான வயல் நிலங்கள் எல்லாம் இன்று காய்ந்து கட்டந்தரையாக கிடக்கின்றன ....
சோமாலியாவின் தெற்கு மாநிலங்கள் இப்படித்தான் மிக வளமான விவசாய நிலமாக பருவமழை பொழியும் வளமான வயல் பூமியாக இருந்தது. கால்நடை வளர்ப்பில் மிக செழிப்பாக இருந்து பின் மித்தேன் இரசாயன கனிம பொருள்கள் அல்லும் வேலைகளை இத்தாலிய கூட்டு மேற்கு கம்பனிகள் ஆரம்பித்து வைக்க படிப்படியாக சோமாலியா தனது அழகை இழந்தது.
வடக்கு இத்தாலிய ஆக்கிரமிப்பு ஆதிக்க சக்திகள் மேற்கு உலகுடன் கைகோர்த்து சோமாலிய மண்ணின் கனிம வளத்தை கொளையடிக்க நாடு நாசம் ஆகியது .
ஏறக்குறைய நூறு ஆண்டுகள் சோமாலியா பெரும் பொருளாதார விவசாய உற்பத்தி சரிந்து வீழ்ந்தது. பல அண்டை நாடுகளுக்கு உணவு கொடுத்த சோமாலியா ஒருவேளை உணவுக்கு உலகிடம் பிச்சை எடுக்கும் நிலை உருவாகியது. நூறு ஆண்டுகளுக்குள் அந்த நாடு மிக மோசமான பஞ்சம் போர் அடக்குமுறை பெண்கள் மீதான வன்முறை என்று எல்லாமே அதிகரித்து இன்று அந்த நாடு கைவிடப்பட்ட ஒருதேசமாக உள்ளது
சமூக சீரழிவுகளை படிப்படியாக சந்தித்து ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் தாய்மார்கள் பிறந்து இறந்து இன்று மிக குறைவான வருவாய் நாடாக சோமாலியா மாறிவிட்டது. இன்று உலகில் மிக பெரிய வறுமை நாடாக மாறிவிட்டது. வடக்கு மாநிலங்கள் செழிப்பாக இருக்க அதற்காக தெற்கு மாநிலங்களில் கட்டுமீறி செய்யப்படும் இரசாயன அகழ்வுகள் தெற்கு மாநிலங்களை பாலைவனமாக மாற்றிவிடும். இதற்கு சிறப்பான உதாரணம் சோமாலியா
இன்று இந்த நிலைதான் தமிழகத்துக்கு வந்துள்ளது. நாளைய சோமாலியாவாக தமிகத்தை மாற்றி விட்டு அதிகார ஆதிக்க வர்கம் தமிழரை பார்த்து கைகொட்டி சிரிக்கபோகின்றது. தமிழர்கள் விழிப்பாக இல்லாவிட்டால் வந்தவன் எல்லாம் இந்த மண்ணை ஆண்டு நம் தலையில் மண்ணை வாரி கொட்டி மூடிவிட்டு சென்றுவிடுவார்கள். நாளை நம் மண்ணில் நமது வருங்கால பிள்ளைகளை எதற்கும் அருகதையற்றவராக ஆக்கி விடுவார்கள்...
இந்தியாவின் வளர்சிக்காக தமிழகம் அழியலாம் என்று முடிவு எடுத்து சில துரோகிகளும் வந்தேறிகளும் கூட்டு களவானிகளும் ஒன்றாக செயல்பட்டு வருகின்றார்கள்
கடந்த திராவிட பெரும் ஊழல் அரசுகளால் அழகான கூவம் நதி சாக்கடை ஆனது. வளமான நதிகளை காய்ந்த மண் அள்ளும் இடமாக மாற்றினார்கள். தமிழகத்துள் ஆறுகள் வருவதை தடுத்தால் மட்டுமே அங்கு ஆற்று படுக்கைகளில் உள்ள மண்ணை அள்ளி கர்நாடகா ஆந்திரா கேரளா மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்க முடியும். ஆற்றை தடுப்பதனால் தமிழனின் விவசாய நிலங்கள் பயனற்று போகும். விவசாயிகளிடம் நிலத்தை இலகுவாக அபகரிக்கலாம் .
அந்த நிலங்களின் கீழ் இருக்கும் மிக பெறுமதியான கனிமங்களை களவாடலாம். இன்று திராவிட ஹிந்தி கூட்டு களவானிகளின் ஆட்சியில் தமிழகம் பாழாகி பயன் அற்ற பூமியாக மாற்றம் அடைந்து வருகின்றது.
சீரான நகர கழிவு நீர் வடிகால் திட்டத்தை நடை முறை படுத்தும் திறமை அற்ற திராவிட ஆரசுகள் அழகான கூவம் நதியை சென்னையின் எழிலை பாழாக்கி தமிழர்களை சிறுமை படுத்தி தமிழனின் நீராதாரத்தை நிலத்தை சுற்றுச்சூழலை சாக்கடை ஆக்கினார்கள். ஆனாலும் தமிழ் அன்னைபூமி அடிக்கடி வெள்ளபெருக்கெடுத்து கூவத்தின் அழுக்கை கழுவி கடலில் கலந்து வைத்தாள்.
தமிழன் இன்னும் விழிக்காது இருந்தால் சோலைவனமான நெடுவாசல் தமிழகம் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது...
என்ன செய்ய போகின்றார்கள் தமிழர்கள்.
பணத்துக்காக அன்னை பூமியை அடமானம் வைத்து விட்டு வடக்கில் அடிமைகளாக வாழபோகின்றார்களா ..
இல்லை.. மீட்க போகின்றார்களா..........
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.